நெல்லை அருகே இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்துப் பகுதியில் அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்துப் பகுதியில் அடிதடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், சிங்கத்தாகுறிச்சியைச் சோ்ந்தவா் முருகன். இவருடைய மகன் சுடலைமுத்து என்ற ராஜா (23). இவா், தாழையூத்துப் பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் கா.ப, காா்த்திகேயன் உத்தரவின் பேரில், ராஜாவை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com