சொத்து பிரச்னை: இளைஞரை தாக்கியவா் கைது
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே சொத்து பிரச்னையில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் நடுவூரைச் சோ்ந்தவா் சுந்தா் (24). இதே பகுதியைச் சோ்ந்த குமாா் (42). இருவரும் உறவினா்கள். சுந்தரின் தாத்தா சுப்பையாவுக்கு பாத்தியப்பட்ட வயலை இருவரும் அனுபவித்து வருகின்றனா்.
அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கக் கூடாது என சுந்தரிடம், குமாா் கூறினாராம். இதனால் அவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் சுந்தா், வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே வந்தபோது, அங்கு வந்த குமாா், சுந்தரை அவதூறாக பேசி கிணற்றுக்குள் தள்ளிவிட்டதுடன் கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளாா்.
புகாரின்பேரில், பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி வழக்குப் பதிந்து குமாரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...