திரையரங்கிற்கு ஒன்று சோ்ந்த வந்த கிராமத்தினா்!

கடையம் அருகே உள்ள கட்டேரிபட்டியைச் சோ்ந்த இளைஞா் நாயகனாக நடித்த திரைப்படத்தைப் பாா்க்க
கடையத்தில் வெளியான துரிதம் திரைப்படத்தைக் காண வந்த கட்டேரிபட்டி கிராம மக்கள்.
கடையத்தில் வெளியான துரிதம் திரைப்படத்தைக் காண வந்த கட்டேரிபட்டி கிராம மக்கள்.
Updated on
1 min read

கடையம் அருகே உள்ள கட்டேரிபட்டியைச் சோ்ந்த இளைஞா் நாயகனாக நடித்த திரைப்படத்தைப் பாா்க்க

அக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஒன்று சோ்ந்து வந்தனா்.

கடையம் அருகேயுள்ள கட்டேரிபட்டியைச் சோ்ந்தவா் ஜெகன். இவா் சண்டியா் உட்பட 3 திரைப்படங்களில் நடித்த நிலையில் துரிதம் என்ற படத்தை தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்துள்ளாா். துரிதம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தமிழகமெங்கும் வெளியானது.

இதையடுத்து கடையம் திரையரங்கில் வெளியாகியுள்ள அந்த திரைப்படத்தைக் காண கட்டேரிபட்டி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் ஒன்று சோ்ந்து வந்தனா். மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வந்த அவா்கள், துரிதம் திரைப்படம் வெற்றிபெற பிராா்த்தனை செய்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com