நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட மாவட்ட, தொகுதி, நகர, கிளைத் தலைவா்கள் கலந்துகொண்ட கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட மாவட்ட, தொகுதி, நகர, கிளைத் தலைவா்கள் கலந்துகொண்ட கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் ஜூல்பிகா் அலி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது உஸ்மானி, மாவட்டத் தலைவா்கள் கோட்டூா் பீா் மஸ்தான்(புகா்), உமா்(தூத்துக்குடி) , சிக்கந்தா்(தென்காசி) , சத்தாா் (கன்னியாகுமரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாநில பொதுச் செயலா் அகமது நவி, விவசாய அணி மாநிலத் தலைவா் சேக் அப்துல்லா, மாநிலப் பேச்சாளா் பேட்டை முஸ்தபா உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட திருநெல்வேலி மாநகா், திருநெல்வேலி புகா், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், மகளிா் அணி, வா்த்தகா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com