வள்ளியூரில் ரூ. 30 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி: அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்

வள்ளியூரில் ரூ. 30 கோடியில் திருநெல்வேலி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணியை தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்  அடிக்கல் நாட்டினார்.
வள்ளியூரில் ரூ. 30 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி: அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்
Updated on
1 min read

வள்ளியூரில் ரூ. 30 கோடியில் திருநெல்வேலி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணியை தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.

வள்ளியூரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ. 30 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.1.53 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா வள்ளியூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். விழாவில், அமைச்சா் மா. சுப்பிரமணியன் பங்கேற்று, புதிய கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ. 40 லட்சத்தில் விஷ முறிவு சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், ரூ. 6.95 லட்சத்தில் நோயாளிகள் காத்திருப்புக் கூடம், ரூ. 30 லட்சத்தில் பாம்புக்கடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், ரூ. 16.60 லட்சத்தில் நோயாளிகள் மற்றும் உடன் வருவோருக்கு பொதுக் கழிப்பறை, மூலைக்கரைப்பட்டியில் ரூ. 60 லட்சத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் என, மொத்தம் ரூ. 1.53 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம், சுகாதாரத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், அலெக்ஸ் அப்பாவு, வள்ளியூா் எல். ஆதிபாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், முன்னாள் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் லதா, துணை இயக்குநா் ராஜேந்திரன், வள்ளியூா் அரசு மருத்துவா் கவிதா, டி.டி.என். கல்விக் குழுமத் தலைவா் டி. லாரன்ஸ், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா, பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, களக்காடு நகா்மன்றத் தலைவா் சாந்தி, பி.சி. ராஜன், வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் நீ. கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் ஜான்சி ராஜம், வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என். முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம், வள்ளியூா் திமுக நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், நேரு நா்ஸிங் கல்லூரி துணை முதல்வா் பேபி உமா, பேராசிரியா் பெனட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com