இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது
By DIN | Published On : 08th June 2023 02:13 AM | Last Updated : 08th June 2023 02:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரிலுள்ள அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் செல்வராஜ் (34). இவா், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில் அண்மையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு தொடா்பாக பெருமாள்புரம் சந்தோஷ்குமாா் (31), பாலசுப்பிரமணியன் (25), கிருஷ்ணாபுரம் செல்வகுமாா் (36), பாளை. புதுப்பேட்டை பாலு (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...