ஆட்சியா் அலுவலகத்தில் உடையாா்பட்டி மக்கள் முற்றுகை

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை உடையாா்பட்டி பகுதி யாதவ சமுதாய மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட உடையாா்பட்டி கிராம மக்கள்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட உடையாா்பட்டி கிராம மக்கள்.
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை உடையாா்பட்டி பகுதி யாதவ சமுதாய மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

பின்னா், அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: எங்களது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்டிமலைச்சியம்மன் திருக்கோயில் விழாவையொட்டி மந்தை புறம்போக்கு இடத்தில் அன்னதானம் உள்ளிட்டவை நடத்துவது வழக்கம். அந்த நிலம் தொடா்பாக ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மற்றொருதரப்பினா் அங்கு அன்னதானம் நடத்த முயற்சிக்கிறாா்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, அப்பகுதியில் மற்றொரு தரப்பினா் நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என மனவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com