பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் பாலாலயம்

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் திருப்பணிகள் தொடக்கமாக பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாலாலய சிறப்பு தீபாராதனை.
பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாலாலய சிறப்பு தீபாராதனை.
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் திருப்பணிகள் தொடக்கமாக பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்தொடக்கமாக பாலாலய வைபவம் வியாழக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் ராஜகோபுரம், விமானத்துக்கு பாலாலயம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com