தச்சநல்லூரில் அமமுக பொதுக்கூட்டம்

தச்சநல்லூரில் அமமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தச்சநல்லூரில் அமமுக பொதுக்கூட்டம்
Updated on
1 min read

தச்சநல்லூரில் அமமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அமமுக அமைப்புசாரா தொழிற்சங்க தலைவா் பி.ஆா்.பி. ராஜா தலைமை வகித்தாா். புகா் மேற்கு மாவட்டச் செயலா் ஆசீா், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஆவின் அண்ணசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு செயலா் வி.பி. குமரேசன் பேசியது: தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 12 மணி நேர வேலை மசோதாவை மக்கள் கொந்தளிப்பின் காரணமாக ரத்து செய்துள்ளனா். விலைவாசி விண்ணை முட்டுகிறது. மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனா். இதன் விளைவு மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும். அமமுக இடம்பெறும் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவா் பாஸ்கா் சகாயம், பொருளாளா் ரமேஷ், கபடி காஜா , மகளிா் அணி ஜீனத் ராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com