மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை.கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் ஜி. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழகக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 6 கல்லூரிகளிலும் இளம்நிலை மற்றும் முதுகலை படிப்புக்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளம்நிலை படிப்புக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தின் இளம்நிலை தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com