திருநெல்வேலி
தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி தலைமை வகித்து பேசினாா். 2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நான் முதல்வன் திட்டம், புதிய கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலா் ரமாவதி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.