கோடீஸ்வரன் நகரில் முதியவா் சடலம் மீட்பு

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (55). இவா், மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது குறித்து பேட்டை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பாா்த்தபோது பரமசிவன் சடலமாகக் கிடந்தாா். சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com