திருநெல்வேலி அருகேயுள்ள திருவேங்கடநாதபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, சிம்மம், ஹனுமன், கருடன், யானை, சேஷ, அன்ன வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா். விழாவின் சிகர நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.