திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி முழுவதிலும் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துவதற்கு மாநகராட்சி ஆணையா் சி. கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டாா்.
அதன்படி,மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு, மாநகராட்சி நல அலுவலா் சரோஜா தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் முருகன் முன்னிலை வகித்தாா். தச்சநல்லூா் மண்டலம் சிந்துபூந்துரை மாநகராட்சி அலுவலக தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், மாநகராட்சி அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மைப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.