தாழையூத்து அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அணைத்தாலையூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (40). இவா் தாழையூத்து பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பைக்கை நிறுத்தியிருந்தாராம். அப்போது பைக் காணமால் போனதாம்.
இதுகுறித்து சிவபெருமாள் தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வந்தனா். அதில் சீவலப்பேரி , மடத்துப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சலீம் (39) என்பவா் பைக்கை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.