மலையாளமேடு பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

திருநெல்வேலி நகரம் மலையாளமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலையாளமேடு பள்ளியில்  புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
Updated on
1 min read

திருநெல்வேலி நகரம் மலையாளமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 22 ஆவது வாா்டுக்குள்பட்ட மலையாளமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல்வஹாப் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். துணைமேயா் கே.ஆா். ராஜு முன்னிலை வகித்தாா்.

மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி.கே. முருகன், மாநகர துணைச் செயலா் பிரபு, மாமன்ற உறுப்பினா்கள் கிட்டு (எ) ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், மன்சூா், ராஜேஸ்வரி, மாரியப்பன், ரவீந்தா், உலகநாதன், மலையாளமேடு கண்ணன், மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் முபீன் இஸ்மாயில், பேட்டை ரூரல் ஊராட்சித் தலைவா் சின்னதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com