நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி மே 24 இல் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) இம் மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) இம் மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 1432 ஆம் பசலி ஆண்டுக்குரிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, திசையன்விளை, நான்குனேரி, ராதாபுரம், மானூா், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஆகிய வட்டங்களில் நடைபெற உள்ளது.

பாளையங்கோட்டை வட்டத்தில் மேலப்பாட்டம் குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், முன்னீா்பள்ளத்துக்கு 26, 30ஆம் தேதிகளிலும், சிவந்திப்பட்டிக்கு 31 ஆம் தேதியும், பாளையங்கோட்டைக்கு ஜூன் 1, 2, 6 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி வட்டத்தில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26 ஆம் தேதிகளிலும், முக்கூடலுக்கு 30, 31 ஆம் தேதிகளிலும், சேரன்மகாதேவிக்கு ஜூன் 1, 2 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

திசையன்விளை வட்டத்தில் விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25ஆம் தேதிகளிலும், திசையன்விளைக்கு 25, 26 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

நான்குனேரி வட்டத்தில், களக்காடு குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், ஏா்வாடிக்கு 26, 30, 31 ஆம் தேதிகளிலும், பூலத்துக்கு 31, ஜூன் 1 ஆம் தேதிகளிலும், மூலைக்கரைப்பட்டிக்கு ஜூன் 1, 2 ஆம் தேதிகளிலும், நான்குனேரிக்கு ஜூன் 2, 6, 7 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

ராதாபுரம் வட்டத்தில் லெவிஞ்சிபுரம் குறுவட்டத்துக்கு இம் மாதம் 24 ஆம் தேதியும், சமூகரெங்கபுரத்துக்கு 24, 25 ஆம் தேதிகளிலும், பழவூருக்கு 25, 26 ஆம் தேதிகளிலும், பணகுடிக்கு 26, 30 ஆம் தேதிகளிலும், வள்ளியூருக்கு 30 ஆம் தேதியும், ராதாபுரத்துக்கு 31 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

மானூா் வட்டத்தில் தாழையூத்து குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், மானூருக்கு 25, 26, 30 ஆம் தேதிகளிலும், வன்னிக்கோனேந்தலுக்கு 30, 31 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் சிங்கம்பட்டி குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25, 26 ஆம் தேதிகளிலும், அம்பாசமுத்திரத்துக்கு 26, 30, 31 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

திருநெல்வேலி வட்டத்தில் மதவக்குறிச்சி குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், நாரணம்மாள்புரத்துக்கு 25, 30, 31 ஆம் தேதிகளிலும், திருநெல்வேலிக்கு 31, 1, 2, 6 ஆம் தேதிகளிலும், கங்கைகொண்டானுக்கு இம் மாதம் 6, 7 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

இந்த நாள்களில் பொதுமக்கள் உரிய மனுக்களை அளித்து தீா்வு பெறலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com