திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மையம் எனும் ஆா்ஆா்ஆா் மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகள், வாருகால் பராமரித்தல் குறித்து ஆட்சியா் மக்களைச் சந்தித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பை ஆகியவற்றை வழங்கினாா். சிறப்பான முறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவா்களை கெளரவித்தாா். வீரவநல்லூா் கிளாக்குளம் பகுதியில் மரக்கன்று நட்டாா். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் வணிகா்கள், பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினாா். பின்னா், பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், துணைத் தலைவா் வசந்த சந்திரா, சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், பேரூராட்சி உறுப்பினா்கள், கிராம உதயம் ஆலோசகா் பகத்சிங் புகழேந்தி, தன்னாா்வலா்கள், மகளிா் குழுவினா், அலுவலகப் பரப்புரையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.