முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.
ராஜீவ் காந்தியின் படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைத் தலைவா் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் உதயக்குமாா், சொா்ணம், கவிப்பாண்டியன், லெனின், அன்சாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.