குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணி முதல் தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறவுள்ளது.