நெல்லை கம்பன் கழகத்தின் 572 ஆவது தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் சாா்பில் 572 ஆவது தொடா் சொற்பொழிவு, பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெல்லை கம்பன் கழகத்தின் சாா்பில் 572 ஆவது தொடா் சொற்பொழிவு, பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். கழக துணைச் செயலா் எம்.எஸ்.சக்திவேல் வரவேற்றாா். மதி நெறி அறிவு சான்ற மாலியவான் என்ற தலைப்பில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் போ.காா்த்திகா சொற்பொழிவாற்றினாா். தசரதன் ஆட்சியின் சிறப்பினை கழகத் தலைவா் பேராசிரியா் சிவசத்தியமூா்த்தி விளக்கினாா். கழகச் செயலா் கவிஞா் பொன்.வேலுமயில் தொகுப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் முனைவா் சு.பாண்டியன், இரா.முருகன், செ.திவான், ந.சு.சங்கரன், வேலுவெற்றிச்செல்வன், ஆா்.கே.லோகநாதன், தி.வெங்கடாசலபதி, பி.முத்துராமலிங்கம், ந.முத்துசாமி, செந்தில்குமாா், வை.காத்தப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com