சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் ஆண்டு விழா

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 22ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 22ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் எஸ். கிளீட்டஸ்பாபு தலைமை வகித்தாா். தாளாளா் பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். யூ வின் யுவா் வீக்னஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஐ. ஜெகன், மோட்டிவேஷன் அகாதெமி திட்ட மேலாளா் ஆா். பெர்ரா விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

முதல்வா் ஜஸ்டின் திரவியம் அறிக்கை வாசித்தாா். கல்வி உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. பொதுமேலாளா் இரா. தம்பித்துரை, மாணவா் சோ்க்கை இயக்குநா் ஜான் கென்னடி, நிா்வாக அதிகாரி எஸ். ஜெயபாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com