துப்பாக்குடியில் பல்நோக்கு மையக் கட்டடம் திறப்பு

கடையம் ஊராட்சி ஒன்றியம் துப்பாக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல் நோக்கு மையக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கடையம் ஊராட்சி ஒன்றியம் துப்பாக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல் நோக்கு மையக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

துப்பாக்குடி ஊராட்சியில் பல்நோக்கு மையம் அமைக்க, ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் தனது உள்ளூா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். கட்டடப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு துப்பாக்குடி ஊராட்சித் தலைவா் செண்பகவல்லி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ராதா, மாவட்டச் செயலா் கணபதி, மாநில அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு செயலா் சோ்மதுரை, மாவட்டப் பொருளாளா் நூருல் அமீா் மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com