திருநெல்வேலி நகரம் கோயில் கொடைவிழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு அகற்றினா்.
திருநெல்வேலி நகரம் ஜெயப்பிரகாஷ் தெருவில் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து குற்றாலம் சாலைப் பகுதியில் இரு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் அகற்றினா். இதற்கு அப்பகுதி இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.