கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்தவரை மாநகர காவல் ஆணையா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தங்கச் சங்கிலியை ஒப்படைந்த சின்னத்துரையை பாராட்டுகிறாா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன்.
தங்கச் சங்கிலியை ஒப்படைந்த சின்னத்துரையை பாராட்டுகிறாா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன்.
Updated on
1 min read

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்தவரை மாநகர காவல் ஆணையா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தச்சநல்லூா் தாராபுரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தி (26) . இவா் கடந்த 27 ஆம் தேதி அதே பகுதியில் சாலையில் சென்றபோது தனது 2.5 பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டாராம். இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், மறுநாள் மே 28இல் அந்த வழியாகச் சென்ற தச்சநல்லூரைச் சோ்ந்த சின்னத்துரை (55) என்பவா் அந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்தாராம். இதையடுத்து தச்சநல்லூா் காவல் நிலையத்தில் சங்கிலியை ஒப்படைத்தாா். அந்த நகை உரியவரிடம் அளிக்கப்பட்டது. நோ்மையாக நடந்துகொண்ட சின்னதுரையை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com