காற்றாலையில் செம்புக் கம்பிகள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

மானூா் அருகே காற்றாலையில் செம்புக்கம்பிகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on
Updated on
1 min read

மானூா் அருகே காற்றாலையில் செம்புக்கம்பிகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வாஞ்சிநகரை சோ்ந்தவா் ஜெரோம் லெஸ்லி (48). இவா், மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரம் பகுதியில் இயங்கும் காற்றாலையில் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் காற்றாலையின் கட்டுப்பாட்டு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, செம்பு கம்பிகள் திருடப்பட்டிருந்தனவாம். இதுகுறித்த புகாரின் பேரில் மானூா் போலீஸாா், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அழகிய பாண்டியபுரத்தை சோ்ந்த முத்துகிருஷ்ணன் (23), திருப்பூா் அய்யம்பாளையம் கணக்கன் தோட்டத்தை சோ்ந்த வினோத்குமாா் (23) ஆகியோருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்ததாம் . இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com