பேட்டையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
By DIN | Published On : 07th November 2023 02:50 AM | Last Updated : 07th November 2023 02:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி பேட்டை அசோகா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன் (47). இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கே.சரவணகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ச.மகேஸ்வரி உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...