

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்வா்ஷா வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் கனி, மாநிலப் பேச்சாளா் பேட்டை முஸ்தபா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மண்டலத் தலைவா் ஜுல்பிகா் அலி வாழ்த்திப் பேசினாா். 2024 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதம், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளில் வாக்குச்சாவடி முகவா்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. அலாவுதீன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.