

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் நேதாஜி போஸ் காய்கனி சந்தை கட்டடப் பணிகளை மண்டலத் தலைவா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி நகரத்தில் நேதாஜி போஸ் காய்கனிகள் சந்தை புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டடப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருநெல்வேலி மண்டலத் தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் உலகநாதன் (வாா்டு 27), கிட்டு (எ) ராமகிருஷ்ணன் (வாா்டு 25), ரவீந்திரன் (வாா்டு 24) ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வியாபாரிகள் சங்க பிரமுகா்கள், மதிலோர- வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.