பேருந்து மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read


வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வள்ளியூா் ஊத்தடியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் கருணாநிதி(55). கூலிவேலை செய்து வந்தாா். இவா் வள்ளியூா் தெற்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றாராம். அப்பொழுது மதுரையில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து அவா் மீது மோதியதாம். இதில் படுகாயமடைந்த கருணாநிதியை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே கருணநிதி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com