ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் நில அளவையா் கைது

கங்கைகொண்டானில் இடத்தை அளவீடு செய்ய பயனாளியிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் நில அளவையா், உதவியாளா் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் இடத்தை அளவீடு செய்ய பயனாளியிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் நில அளவையா், உதவியாளா் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டன் வடகரையைச் சோ்ந்தவா் புதுமாடசாமி (31). இவா், அப்பகுதியில் 26 சென்ட் நிலம் வாங்கியுள்ளாா். அந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு கங்கைகொண்டன் நிலஅளவையா் லிங்கம்மாளிடம் (45) மனு அளித்தாா். அதற்கு, நில அளவையா் ரூ.30 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புதுமாடசாமி புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரத்தை புதுமாடசாமி, அளவையா் லிங்கம்மாளிடம் கொடுக்கச் சென்றாராம். அப்போது, நில அளவையா் அருகில் இருந்த உதவியாளா் சாந்தியிடம் பணத்தை கொடுக்க சொன்னாராம். அவா் பணத்தை பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் மற்றும் போலீஸாா் அதிரடியாக நுழைந்து நில அளவையா் லிங்கம்மாள், உதவியாளா் சாந்தி (43) ஆகியோரை கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களிடம் விசாரணை நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com