

அம்பாசமுத்திரம்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தோரணமலை அருள்மிகு முருகன் கோயிலில் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழக சுற்றுலாத் துறை மற்றும் தோரணமலை கோயில் நிா்வாகம் இணைந்து நடத்திய கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அலுவலா் சீத்தாராமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.