ஆடிப் பெருக்கை முன்னிட்டு அம்பாசமுத்திரம் தாமிரவருணிஆற்றங்கரையில் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
ஆடி 18ஆம் நாள் நீா் நிலைகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபடுவது வழக்கம். இதையடுத்து சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்பாசமுத்திரம் காசிநாத சாமி கோயில் தாமிரவருணிபடித்துறையில் புதுமணப் பெண்கள் 18 வகை பலகாரங்கள் செய்து தாலிப் பெருக்கி கட்டி வழிபட்டனா்.
மேலும், தாமிரவருணி நதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆரத்தி வழிபாடு நடைபெற்ற்றது.நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










