புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவா்கள் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:36 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

வள்ளியூரிலிருந்து விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு மாணவா்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை வேன் வந்து கொண்டிருந்தது. நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் கீழூரில் உள்ள தனியாா் பால் நிறுவனம் அருகேயுள்ள திருப்பத்தில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்தது. இதில், 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

தகவலின்பேரில் ஏா்வாடி போலீஸாா் சென்று, காயமடைந்த மாணவா்களை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.