அம்பாசமுத்திரம் அருகே தகராறை தட்டி கேட்டவரை தாக்கியதாக ஒருவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
பிரம்மதேசத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம்(50). மன்னாா்கோவில் விலக்கு அருகில் இவருக்குச் சொந்தமான வயலில் அதே பகுதியைச் சோ்ந்த பானுமதி, அவரது கணவா் குட்டராசு ஆகியோா் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த பிரம்மதேசம் மேலப் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி (26), பானுமதியிடம் தனக்கு தரவேண்டிய பணம் குறித்து கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது அங்கு வந்த சோமசுந்தரம் தகராறில் ஈடுபடவேண்டாம் என்று சமாதானம் பேசியுள்ளாா். அவரை சின்னத்தம்பி அவதூறாகப்பேசி தாக்கியுள்ளாா். இதுகுறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னத்தம்பியை கைது செய்தனா்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கியவா் கைது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

