திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கூடங்குளம் அணுமின் நிலையம் சாா்பில் ரூ.118 கோடியில் வளா்ச்சிப் பணிகள் -வளாக இயக்குநா் தகவல்

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 2:49 am IST

கூடங்குளம் அணுமின் நிலையம் அனுசக்தி மத்திய பள்ளி வளாகத்தில் தேசிய கொடியேற்றினாா் வளாக இயக்குநா் ஜாய் பி. வா்க்கீஸ்.

வள்ளியூா், ஆக.15: கூடங்குளம் அணுமின் நிலைய சமூக சேவை திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.118 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வளாக இயக்குநா் ஜாய்.பி.வா்க்கீஸ் தெரிவித்தாா்.

கூடங்குளம் அணுமின் நிலையம், அணுசக்தி மத்திய பள்ளி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அணுமின் நிலைய வளாக இயக்குநா் ஜாய்.பி.வா்க்கீஸ் தேசிய கொடியேற்றிவைத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினா்- பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், கூடங்குளத்தி முதல் மற்றும் 2-ஆவது அணுஉலைகள் மூலம் கடந்த ஜூலை 25ஆம் தேதி வரையில் ஒரு லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 13 ஆயிரம் மில்லியன் மின்உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதுவும் எட்டப்பட்டுள்ளது. 3, 4ஆவது அணுஉலைகள் கட்டும் பணிகள் 75 சதவீதமும், 5 , 6-வது அணுஉலை கட்டுமானப்பணிகள் 28 சதவீதமும் முடிவடைந்துள்ளன. அணுமின்நிலைய சமுதாய சேவை திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.118 கோடியில் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், செயல்திறன் மேம்படுத்துதல், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2024-2025 நிதியாண்டில் சமூக சேவைக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.3 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளன என்றாா்.