எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பைக் விபத்தில் அணுமின் நிலைய விஞ்ஞானி பலி

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:12 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே பைக் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததில் கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானி உயிரிழந்தாா்.

மத்தியபிரதேசம் மாநிலம் போபாலைச் சோ்ந்தவா் ஆதிதாம வஸ்தவா(27). இவா் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானியாக கடந்த 2022-ல் பணிக்கு சோ்ந்தாா். இவா் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் உள்ள அணுவிஞ்ஞானிகள் குடியிருப்பில் குடியிருந்து வந்தாா்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை விஸ்வநாதபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியின் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். உடற்கூறாய்வுக்குப்பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடல் விமானத்தில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.