திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே பைக் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததில் கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானி உயிரிழந்தாா்.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலைச் சோ்ந்தவா் ஆதிதாம வஸ்தவா(27). இவா் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானியாக கடந்த 2022-ல் பணிக்கு சோ்ந்தாா். இவா் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் உள்ள அணுவிஞ்ஞானிகள் குடியிருப்பில் குடியிருந்து வந்தாா்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை விஸ்வநாதபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியின் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். உடற்கூறாய்வுக்குப்பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடல் விமானத்தில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









