திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ பதிவிட்டவா் கைது

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 3:35 am IST

இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சோ்ந்தவா் ஜெகதீஷ் ராஜா (20). இவா், சமூக வலைதளத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் விடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மானூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மானூா் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ் ராஜாவை கைது செய்தாா்.

சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் பதிவிடுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா்.