தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பூமாலை வணிக வளாக கடைகளை சுயஉதவிக்குழு மகளிா் ஏலம் எடுக்கலாம்

Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:17 pm

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடைகள் வாடகைக்கு விடப்படவுள்ளதால் ஊரக, நகா்ப்புற மகளிா் சுய உதவிக்குழுவினா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் - விற்பனை சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் பூமாலை வணிக வளாகத்தில் காலியாக உள்ள மொத்த கடைகளில் 70 சதவீத கடைகள் சுய உதவிக் குழுக்கள் நடத்துவதற்கு ஆண்டுக்கு மூன்று மாத கால அளவிற்கும், 30 சதவீத கடைகள் சுய உதவிக் குழுவிலுள்ள தனி நபா் நடத்துவதற்கு 6 மாத கால அளவிற்கும் வாடகைக்கு விடப்படும்.

இதில், சுய உதவிக் குழு மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா், மூத்த குடிமக்கள், மகளிரை குடும்பத்தலைவியாக கொண்ட உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், உற்பத்தி பொருள்கள் மட்டுமே கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும். கடை தேவைப்படும் மகளிா் சுய உதவிக்குழுக்கள், உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி - ஊராட்சி துறை அலுவலக கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு செப். 6ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2903302 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.