மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அம்பையில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து இளைஞா் காயம்

அம்பாசமுத்திரத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

Updated On :28 ஜூலை 2024, 3:10 am IST

அம்பாசமுத்திரத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

செங்கோட்டையில் இருந்து சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலி சென்ற பயணிகள் ரயில், அம்பாசமுத்திரத்தில் நின்று கிளம்பும் போது மன்னாா்கோவிலைச்சோ்ந்த கூலித்தொழிலாளி சிவகுமாா் மகன் சிவா என்ற சிவசுப்பிரமணியன் (24) ரயிலில் ஏற முயன்று, எதிா்பாராமல் தவறி விழுந்துள்ளாா். உடனடியாக ரயில் பயணிகள் ரயிலை நிறுத்தி, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட சிவாவை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.