நெல்லையில் தப்பிய கைதி பெங்களூருவில் கைது

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, பெங்களூருவில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, பெங்களூருவில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவா், வழிப்பறி வழக்கில் கடந்த 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சென்றபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கிருந்து அவா் கடந்த திங்கள்கிழமை தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனா். இந்த நிலையில் மணிகண்டனை தனிப்படை போலீஸாா் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com