தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

வீரவநல்லூா் அருகே மோதல் வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :31 ஜூலை 2024, 1:23 am IST

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குழியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ் (26). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த தொழிலாளியான மாசானம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெள்ளங்குழி பேய் கோயில் அருகே அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஜெகதீசை, மாசானம் தாக்கினாராம். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மாசானத்துக்கு ஓராண்டு சிைண்டனை, ரூ.6,500 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.