கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

வீரவநல்லூா் அருகே மோதல் வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

Published On :

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குழியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ் (26). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த தொழிலாளியான மாசானம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெள்ளங்குழி பேய் கோயில் அருகே அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஜெகதீசை, மாசானம் தாக்கினாராம். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மாசானத்துக்கு ஓராண்டு சிைண்டனை, ரூ.6,500 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.