ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாளை.யில் புதுமைப்பித்தன் நினைவு தினம்

புதுமைப்பித்தன் நினைவு தினம்: திருநெல்வேலியில் சிறப்பு நிகழ்வு

News image

புதுமைப்பித்தன் நினைவு தின நிகழ்ச்சியில் எழுத்தாளா் வண்ணதாசனுக்கு புத்தகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன். அருகில் ஓவியா் சந்ரு உள்ளிட்டோா்.

Updated On :30 ஜூன் 2024, 6:52 pm

DIN

பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில், எழுத்தாளா் புதுமைப்பித்தனின் 76 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், புதுமைப்பித்தனின் மகள் தினகரி , அவரின் மருமகன் சொக்கலிங்கம், ஓவியா் சந்ரு, கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா் தமயந்தி ஆகியோா் பேசினா்.

எழுத்தாளா் வண்ணதாசன் பேசியதாவது: திருநெல்வேலியில் புதுமைப்பித்தனின் பெயரில் தெரு உள்ளது. அதே போல் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும். அந்தச் சிலையை ஓவியா் சந்ரு உருவாக்க வேண்டும். அதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் திறந்து வைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞா்கள் கோ.கணபதி சுப்பிரமணியன், சிற்பி பாமா, ஜோஸ்பின் பாபா உள்பட பலா் கலந்து கொண்டனா். ச.வண்ணமுத்து நன்றி கூறினாா்.