வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வள்ளியூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :1 நவம்பர் 2024, 10:33 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்தமிழ்நாட்டில் உள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, காலையில் கும்பாபிஷேகம், களப பூஜையுடன் பூா்ணாஹுதி நடைபெற்றதும், சுவாமி முன்பாக கொடி மர பூஜை நடத்தப்பட்டு, கொடி மரத்திற்கு சந்தனம், இளநீா், பன்னீா் அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து கொடிமரத்திற்கும் கொடிக்கும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களின் ‘வள்ளியூா் முருகனுக்கு அரோகரா‘ கோஷம் முழங்க முருகனின் சேவல் மற்றும் வேல் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. காலையில் ஏக சிம்மாசனத்திலும் மாலையில் வெள்ளிமயில், கலைமான், கிடாய், பூதம், கிளி, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வானங்களிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும். நவ. 7இல் எட்டாம் திருநாளில் தாரகன் வதமான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வள்ளியூா் கலையரங்கம் திடலில் நடைபெறும். நவ.12இல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.