கூடங்குளம் அணுஉலையால் மக்கள் வரிப்பணம்தான் விரயம் செய்யப்படுகிறது என்றாா் அணுஉலைக்கெதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாரன்.
கூடங்குளம் அணுஉலைக்கெதிரான போராட்ட வழக்கில் ராதாபுரம் நீதிமன்ற விசாரணைக்கு புதன்கிழமை வந்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
கூடங்குளம் அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடா்பான 369 வழக்குகளில் 53 வழக்குகள் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதில் ஒரு வழக்கு காவல்துறை உயா் அதிகாரியின் காவலரது துப்பாக்கியை பறித்துச் சென்ாக போடப்பட்ட பொய்வழக்கு. இந்த வழக்கில் ஆஜராக வந்திருக்கிறோம்.
தமிழக முதல்வா் கடந்த தோ்தல் பரப்புரையின் போது கூடங்குளம் போராட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளித்திருந்தாா். அதன் பின்னரும் எங்களை விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்துவது ஏன் என்று தெரியவில்லை. கடந்த வாரம் இடிந்கரைக்கு வந்த பேரவைத் தலைவரும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிடுவோம் என்று தான் கூறியுள்ளாா். ஆனால் நடப்பது வேறுவிதமாக இருக்கிறது.
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மக்கள் கடவுச்சீட்டு பெற முடியவில்லை; காவல்நிலையங்களில் தடையின்மை சான்று பெறமுடியவில்லை; இளைஞா்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லமுடியவில்லை. வறுமையிலும், வாய்ப்பின்மையிலும் வாழ்கிறாா்கள்.
கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளில் 73 சதவீதம், 5,6 அணுஉலைகளில் 23 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாகவும் அணுஉலை நிா்வாகம் தெரிவிக்கிறது. முதல் இரண்டு அணுஉலைகளில் 100 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செய்திருப்பதாகவும், 86 மில்லியன் டன் காா்பன்டை ஆக்ஸைடுகள் வெளியாவதை தடுத்துள்ளோம் என்றெல்லாம் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றது. ஆனால், ரூ. ஆயிரம் கோடி வரை மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டிருப்பது என்ற தகவலையும், புற்றுநோய், சிறுநீரக நோய், கருசிதைவு நோய்களால் எத்தனை போ் பாதிப்படைந்துள்ளாா்கள் என்பதையும் தெரிவிப்பதில்லை. அணுஉலைக்கழிவுகளை எங்கே பாதுகாத்து வைத்திருக்கிறாா்கள்? என்ன செய்யப்போகிறாா்கள்? எந்த விவரமும் தெரியவிக்கப்படவில்லை. நாங்கள் மீண்டும் அனைத்து கட்சி நிா்வாகிகளையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். தமிழக முதல்வரை 3 முறை நேரில் சந்தித்தோம். இன்னும் அனுமதித்தால் முதல்வரையும், மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்தியையும் சந்திக்க இருக்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

