ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தேசிய பூப்பந்தாட்ட போட்டி: நெல்லை மாவட்ட இரு வீரா்கள் தோ்வு

தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:36 pm

Din

தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட சப் ஜூனியா் (14 வயதுக்குள்பட்டோா்) அணிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சோ்ந்த திஷாந்த், நித்திய செல்வி ஆகியோா் தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் இருவரும், இம் மாதம் 25 முதல் 29 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம், ரோடாக் நகரில் நடைபெறும் தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். தோ்வுபெற்ற வீரா்களை தமிழக பூப்பந்தாட்டக் கழக மாநில துணைத் தலைவா் சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக்கழகச் செயலா் வெள்ளைப் பாண்டியன், மேலாளா் சோமசுந்தரம், பயிற்சியாளா்கள் சித்திரை செல்வன், சுப்பையா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்கள் திஷாந்த், நித்திய செல்வி ஆகியோரை பாராட்டிய பூப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள்.