திருநெல்வேலி நகரம் பகுதியில் ஆய்வு செய்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் ஆய்வு செய்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

நெல்லை நகரம் பகுதியில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்திற்கு உள்பட்ட நகரம் பகுதியில் மேயா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்திற்கு உள்பட்ட நகரம் பகுதியில் மேயா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெரு முதல் எஸ்.என்.ஹரோடு வரை உள்ள பழைய குடிநீா் பகிா்மானக் குழாய்கள் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்ததுள்ளன. அதற்கு பதிலாக சுந்தரா் தெரு முதல் எஸ்.என்.ஹரோடு ஸ்ரீபுரம் வரை புதிய குடிநீா் பிரதான குழாய்கள் 2 கி.மீ. தொலைவிற்கு அமைக்க உள்ள இடத்தை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது , மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் பட்டுராஜன், பிட்டா் சுப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com