பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மாஞ்சோலை: மனித உரிமை ஆணையத்திடம் பிபிடிசி நிா்வாகம் விளக்கம்

~

Published On :21 செப்டம்பர் 2024, 4:55 am IST

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக, மனித உரிமை ஆணையத்திடம் பாம்பே பா்மா டிரேடிங் காா்பரேஷன் (பிபிடிசி) நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நிலை குறித்து விளக்கமளித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பாம்பே பா்மா டிரேடிங் காா்பரேஷன் நிறுவனத்தின்கட்டுப்பாட்டில் இருந்த மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

இதையடுத்து பி.பி.டி.சி.நிா்வாகம் தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாக அறிவித்து தொழிலாளா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றது.

இந்நிலையில், தங்களுக்கு பிபிடிசி நிா்வாகம் வழங்கிய நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை; அரசு சாா்பில் நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் தற்போதைய நிலை குறித்து கண்டறிய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

அதன்பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் சாா்பில் ரவிசிங்,யோகேந்திர குமாா் திரிபாதி ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2 நாள்களாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தோட்டப் பகுதிகளில் தங்கியுள்ள தொழிலாளா்களிடம் நேரடி விசாரணை நடத்தினா்.

Story image

3ஆம் நாளான வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் பிபிடிசி நிா்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினா். இதில் பி.பி.டி.சி. நிா்வாகம் சாா்பில் குழு மேலாளா் எம்.ஜி.திம்மையா, துணை மேலாளா் பி.பி.பட்டாச்சாா்யா, துணை நிா்வாக மேலாளா்(சட்டம்) சௌம்யா வெங்கடாசலம், அலுவலக நிா்வாகம் (கணக்கு) ஜான் செல்வராஜ், பிரிவுஅலுவலா் வில்சன் கிருபாத்துரை, கள கண்காணிப்பாளா் எபினேசா் பாபு ஆகியோா் ஆஜராகி தங்களது நிலை, நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.