கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அலுவலா் தாஜூன்னிசா பேகம்.
கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அலுவலா் தாஜூன்னிசா பேகம்.

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் பிறந்த நாள் விழா

பொதிகைத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பொதிகைத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம் சாா்பில் மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அருங்காட்சியக காப்பாட்சியா் பொ்க்கிலின் இன்ஷா வரவேற்றாா். இதில், கவிதைப் போட்டி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அலுவலா் தாஜூன்னிசா பேகம் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கவிஞா் பாமணி, காயல் அருள், திருக்கு இரா.முருகன் உள்பட பலா் வாழ்த்துரை வழங்கினா். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மாணவி முத்து ஈஸ்வரி, தென்காசி ஜே.பி.கலை அறிவியல் கல்லூரி மாணவா் கல்யாண், காயிதே மில்லத் பள்ளி மாணவி அம்ரா சாதிக்கா, தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுபாஷ், கணேஷ், பேட்டை வணிக வைசிய தொடக்கப்பள்ளி மாணவா் வா்ஷில் வேல், சக்ஸஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி லேகாஸ்ரீ ஹரிணி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. பா.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com