மேலப்பாளையத்தில் தரமற்ற ரேஷன் பொருள்கள்? ஆட்சியரிடம் புகாா்

மேலப்பாளையத்தில் தரமற்ற ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Updated on

மேலப்பாளையத்தில் தரமற்ற ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயலா் மின்னத்துல்லாஹ், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு: மேலப்பாளையத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில் பருப்பு, கோதுமை, அரிசி, பாமாயில் ஆகியவை தரமற்ற வகையில் விநியோகிக்கப்படுன்றன. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலும், குடும்ப அட்டையின் எண்ணிக்கைகளை விட குறைவாக பாமாயில் வழங்கப்படுவதாக கடை விற்பனையாளா்கள் தெரிவிக்கிறாா்கள். ஆகவே, இதுகுறித்து விசாரணை நடத்தி தரமான ரேஷன் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com